Pages

Friday, June 19, 2015

அன்புள்ள அப்பா (2)

அந்த ராமசாமிக்கு ரொம்ப சந்தோஷம்.

தான் செய்யமுடியாததை தன் மகன் செய்து விட்டானே !!

என்ற பெருமிதம்
அவர் இதயமெங்கும் கொப்பளித்தது போலும் !!

ஆம்.
தனது வாழ்நாளெங்கும் ஒரு நடிகனாக வாழ்ந்தார். பெரும் பொருள் சேர்த்தார்.

ஆயினும் தனது மகனை தான் நினைத்தது போல் ஒரு எஞ்சினீர் ஆகவோ டாகடர் ஆகவோ
அவர் கனவு பலிக்கவில்லை.
காலம் அது போல அமையவில்லை.

ஒரு நாள் அந்த மகன் அவர் முன்னே வந்து நின்று:

அப்பா என்றான்.

என்னடா...

உனக்குத் தெரியாதா என்ன ?

என்னடா !! நீயும் தன்னை நடிகன்னு, ஊரை சுத்திக்கினு, ஒரு சான்ஸ் கூட கிடைக்காம திணறிக்கிட்டு இருக்கிறே... அது தான் எனக்குத் தெரியும்.

இல்லப்பா...

ஏன்ன நொள்ள்ப்பா...

நான் நடிச்ச படம் ,
அது சின்ன குறும்படம் தான், ஆனா அது ஆஸ்கார் லே விருது வாங்கி இருக்குன்னு
நியூஸ் வந்திருக்கு...

அவருக்கு இதயம் நின்று போனது போல் இருந்தது.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..இவன்  தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

மகனே என்று அவனை ஆரத் தழுவிக் கொண்டார்.

உனைப் பெற்றதற்கு என்ன தவம் செய்தேனோ !! என்று கண்ணீர் வடித்தார்.

அப்பா.. நீ தாம்பா எனக்கு எப்பவுமே ஹீரோ... அது சரியில்ல, என்னை அந்த படிப்பு , இந்த வேலை என்று அனுப்பிச்சா எப்படி ?

தப்பு தப்பு தான் .
ஆனா என்னை ஹீரோ ஹீரோ என்று சொல்லி
பெரிய வார்த்தை பேசாதே...
நான் சாதாரண நகைச்சுவை நடிகன் தான் ...
என்றார்.

சரிடா.ராமசாமி..
என்றான் ஆஸ்கார் விருது பெற்ற நடிகன்.

சொல்லிவிட்டு சிரிக்கிறான்.



 அன்புள்ள அப்பா (2)


அப்பாவை நினைந்து உருகச்செய்யும்
பத்து அற்புத
கணங்கள்.
Incredible
Moments
When
Dad
Yours and Mine
Saved the Day
for Us.

Do we remember them ???
!!!

2 comments:

  1. அருமை தாத்தா! சூப்பர் பதிவு! அந்தக் காணொளி சிறப்பு...

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!