Pages

Saturday, October 12, 2013

யார் கதையும் இதுவல்ல




பொறி ஒன்று
தீப்பொறி ஒன்று
வெகுண்டு எழும்போது
கார்கால மழை அதை அணைக்கி றது.
கார் காலமே எனக்குள் நெருப்பு மூட்டின்
யார் வந்து அணைப்பார்..நீ சொல்.

காற்றே
தென்றல் காற்றே ..நீ  வருகையிலே
வனங்கள் வசந்தம் என மகிழ்வுறுமே.
காற்றே நீ
புயலாய் வந்துவிட்டால்
பூந்தோட்டங்கள் நிலை பெயர்ந்திடுமே


கனவில் கட்டிய கோவில் ஒன்று
என் கண்களின் முன்னே நொறுங்கி விழுந்தது.
ஏன் இந்தக்கோரம்  என கேட்டுவிடாதே.


யார் கதையும் இதுவல்ல என் பொறுப்பே இதில் அதிகம்.

எதிரி யாரேனும் என்னைப் புண்படுத்தியிருந்தால்
என் நண்பன் ஒருவன் வந்திருப்பான். மனதிற்கு ?ஆறுதல் தந்திருப்பான்.

மனதிற்கினியவனே ரணம் தந்திருந்தால்,
மாற்று மருந்து தர யார் இயலும் ?

என்ன நடப்பதெனப் புரியவில்லை
எங்கு நடந்தோம் என மட்டும் புரிகிறது.

அடிபட்டும் உயிர் வாழ்கின்றோம்
அடிபட்டால் உயிர் பிரிவதில்லை

தாகத்தால் தவிக்கையிலே தணிப்பது அந்த மதுவே
தகிப்பது மதுவே என்றால் தணிப்பது அதை யார் செய்வர் ?

சூறாவளி காலமிது. சிறிய  சத்தங்கள் எடுபடாது.


ஆடிக்காற்றைக் குறை சொல்லாதே. என்னை
ஆட்டிப்படைத்தவன் வேறொருவன்

கடுங்காற்றில் கப்பல் மூழ்கிவிட்டால்
கப்பலோட்டி நம்மை கரை சேர்ப்பான்.

மாலுமியே படகை மூழ்கடித்தால்,
மாலுமியை யார் தப்புவிப்பான்?


hum se mat poochho kaise, mandir tootaa sapanon kaa
logon kee baat naheen hai, ye kissaa hain apanon kaa
koee dushman thhais lagaaye, to meet jiyaa bahalaaye
manameet jo ghaav lagaaye, use kaun mitaye?
naa jaane kyaa ho jaataa, jaane hum kyaa kar jaate
peete hain to zindaa hain, naa peete to mar jaate
duniyaa jo pyaasaa rakhe, to madiraa pyaas bujhaaye
madiraa jo pyaas lagaaye, use kaun bujhaaye?
maanaa toofaan ke aage, naheen chaltaa zor kisee kaa
maujon kaa dosh naheen hai, ye dosh hai aur kisee kaa
majadhaar mein naiyyaa doobe, to majhee paar lagaaye
maajhee jo naaw duboye use kaun bachaaye?


No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!